தமிழகத்தின் 5 மாவட்டங்களில் ரெமிடெசிவிர் மருந்து – மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர்!!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெமிடெசிவிர் மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ரெமிடெசிவிர் மருந்துகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகபி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி ஊர்களில் வேலை செய்யும் மக்கள் சிரமப்படாமல் இருக்க அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? மத்திய அரசுக்கு அழுத்தம்!
இந்நிலையில் கொரோனா மருந்தான ரெமிடெசிவிர் மருந்து சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. இதனால் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுபராமணியன் கூறுகையில், தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெமிடெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் மருத்துவமனைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடம் கொரோனா சிறப்பு கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வருகிற மே 15 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை,சேலம், கோவை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் ரெமிடெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Stanley hospitals eppo da Stalin hospital aachu…