தமிழகத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிவாரண நிதி – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாத, நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
நிவாரண நிதி:
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. தொற்றின் தாக்கம் மே மாதத்தில் அதிகரிக்க தொடங்கியதன் விளைவால் கடந்த மே 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழில்களும் முடங்கியது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 அளிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
முதல்கட்டமாக மே மாதத்தில் ரூ.2,000ம், இரண்டாம் தவணையாக ஜூன் மாதத்தில் ரூ,2,000ம் வழங்கப்படுகிறது. முதல் தவணை கொரோனா நிவாரண நிதி 99.9% மக்கள் பெற்று விட்டதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான நிவாரண நிதி வழங்கும் பணிகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் பெரிதும் பலனடைந்துள்ளனர். இந்நிலையில், பானு என்பவர் தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாத 3ம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த நல வாரியத்தில் பதிவு செய்யாத 3ம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான 3ம் பாலினத்தவர்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.