கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி – முதல்வர் நாளை துவக்கம்!
கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தமிழக அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள், சலுகைகள் மற்றும் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஜூன் 16) துவங்கி வைக்க உள்ளார்.
நிவாரண நிதி
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலையானது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நோய் தொற்றினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த பாதிப்பானது தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையிலும் தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நோய் தாக்கத்துக்கு ஆளாகுகின்றனர். இதற்கிடையில் கொரோனா 2 ஆம் அலை நாடு முழுவதும், தமிழகத்திலும் பலரது உயிர்களை பறித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் தனியார்மயம்!
அதில் பலர் தங்களது பெற்றோரை இழந்தவர்களாகவும், பல குழந்தைகள் பெற்றோரை இழந்தவர்களாகவும் இன்று வரை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இவை எப்போதுமே மீட்டெடுக்க முடியாத வடுவாக காணப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு சில நலத்திட்ட உதவிகள், நிவாரண நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்கவும் தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாளர் தலைமையின் கீழ் பணிக்குழு அமைக்கப்பட்டு ஆதரவற்ற குழந்தைகளின் கணக்கெடுப்பு, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ப்பு, வங்கி கணக்கில் 5 லட்சம் வைப்பு நிதி உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்குகளுக்கு 5 லட்சம் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஜூன் 16) துவங்கி வைக்க உள்ளார். இதற்காக கொரோனவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது.