குறைந்த விலையில் அறிமுகமாகும் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் – அம்பானியின் சூப்பர் திட்டம்!
இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதில் ஜியோ நிறுவனம் முன்னோடியாக இருக்கிறது. இந்நிலையில் 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு கொண்டு வர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜியோ அறிவிப்பு
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு முன்முதலில் இலவச டேட்டா என்ற வசதியை கொண்டு வந்தது. அதன் மூலமாக ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்திற்கு மாறி இருக்கின்றனர். மேலும் பல செல்போன் நிறுவனங்கள் அதிகமான விலையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்த நிலையில், அந்த போன் நிறுவனத்திற்கு பதிலடியாக ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது.
அதனை தொடர்ந்து தற்போது ஜியோ நிறுவனம் மலிவு விலையில் லேப்டாப்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை ஜியோ நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. . குவால்காம் நிறுவனம் சிப்களையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓஎஸ் மற்றும் ஆப்ஸ்களையும் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.09-ம் தேதி மதுக்கடைகள் மூடல் – காவல்துறையின் முக்கிய அறிவிப்பு! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
ஜியோ மடிக்கணினியில் மைக்ரோ சாஃப்டின் விண்டோஸ் Operating system பயன்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜியோ மடிக்கணினியை விநியோகிக்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் பொதுச்சந்தைக்கு ஜியோ மடிக்கணினி விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் ஜியோவின் 5ஜி மொபைல்போன், 5ஜி சேவை நடைமுறைக்குவரும்போது, இந்த லேப்டாப்பும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்