கொரோனாவால் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு 5 ஆண்டு ஊதியம் – ரிலையன்ஸ் அறிவிப்பு!!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை அந்த ஊழியரின் சம்பளம் வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா நிவாரணம்:
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி தலைமையில் செயல்பட்டு வரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி கொரோனா காரணமாக உயிரிழக்கும் ஊழியர் ஒருவர் கடைசியாக பெறும் சம்பளத்தை, அவரது குடும்பங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செலுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த ஊழியர்களின் குழந்தைகள் கல்லூரியில் பட்டம் பெறும் வரை, அவர்களின் கல்விக்கு இது துணைபுரியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து RIL தலைவரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நிதா அம்பானி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு ரிலையன்ஸ் குடும்பம் என்ற வாக்குறுதியை இந்நிறுவனம் மதிக்கிறது. ஊழியர்களின் இக்கட்டான காலத்தில் ரிலையன்ஸ் அவர்களுக்கு ஆதரவளிக்கும். இந்த கடுமையான நேரங்கள் மிகவும் இருண்டதாக தோன்றினாலும், நீங்கள் தனியாக இல்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ரிலையன்ஸ் நிறுவனம் உங்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் சேர்ந்து நிற்கிறது’ என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா காரணமாக இறந்தால் அவர்களின் அனைத்து குழந்தைகளும், பட்டம் பெறும் வரை கல்வி, விடுதி செலவுகள் மற்றும் புத்தகங்களுக்கு நிதியளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் ரயில் போக்குவரத்து – 10 நிறுவனங்கள் விண்ணப்பம்!!
மேலும் இறந்த ஊழியரின் மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மருத்துவ வசதிக்காக 100 சதவீத காப்பீட்டு பிரீமியம் கட்டணங்களை கொடுக்கும். தவிர இறந்த ஆஃப்-ரோல் ஊழியருக்கும் ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என கூறியுள்ளது. மேலும் தனிப்பட்ட முறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மீண்டு வரும் காலம் வரையும் அந்த ஊழியர்கள் சிறப்பு விடுப்பை பெற்று கொள்ளலாம் என்று RIL அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.