தலைநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள்!
சீனாவில் படிப்படியாக கொரோனா குறைந்து வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் ஜூன் 1 முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பெய்ஜிங்கிலும் நோய் பரவல் குறைந்து வருவதால் ஃபெங்டாய் மற்றும் சாங்பிங்கின் போன்ற சில பகுதிகளைத் தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு;
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்ததால், அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இந்த கடுமையான ஊரடங்கு நடவடிக்கையின் பலனாக கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் ஷாங்காயில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து ஜூன் 1 முதல் அந்த கட்டுப்பாடுகளில் மிகப்பெரிய அளவில் தளர்வு அளிக்கப்பட்டது. பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு மக்கள் மீண்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மால்கள், மருந்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் 75 சதவீத திறனில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காக்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று முடிவுகளை பெற்றிருக்க வேண்டும்.
தனியார் வங்கியில் உதவியாளர் வேலை ரெடி – 12 ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ஷாங்காய் நகரவாசிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் ஷாங்காய் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த வகையில் பெய்ஜிங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில், ஃபெங்டாய் மற்றும் சாங்பிங்கின் போன்ற சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் ஹோட்டல்கள் மீண்டும் திறக்கப்படுகிறது. திரையரங்குகள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் 75 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.