Reliance Jio வின் புதிய ரீசார்ஜ் ஆபர் பேக் – ரூ.185 பிளான்!
ஜியோ போன் பயனாளர்களுக்கு 185 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டாவது மாதம் அதை இலவசமாக பெறலாம். இது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
புதிய ரீசார்ஜ் திட்டம்:
இந்தியாவில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு இன்டர்நெட் தேவை அதிகம் இருந்தது. எனவே ஜியோ விலை குறைந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி தடையில்லா டேட்டாவை வழங்கியது. சமீபத்தில் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டமான 98 ரூபாய் பிளான் கொண்டு வரப்பட்டது.
மத்திய ரயில்வே, பாதுகாப்பு அமைச்சக பணியாளர்களுக்கான DA உயர்வு – விரைவில் அறிவிப்பு!
மேலும் எழும் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.155, ரூ.125 மற்றும் ரூ.75 திட்டங்களும் வழங்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து தற்போது ஜியோ போன் பயனாளர்களுக்கான 185 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு மாதத்திற்கு இரண்டாவது மாதம் அதை இலவசமாக பெறலாம். இது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.
TN Job “FB Group” Join Now
இது தவிர, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. மேலும் ஜியோ ஆப்களுக்கான சந்தாவும் 185 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கபடுகிறது. இந்த திட்டம் ஜியோ போன் பயனாளர்களுக்கு கூடுதல் சலுகையாக அமைந்துள்ளது. இந்த திட்டம் ஜியோ சிம் கார்டுடன் கூடிய ஜியோ போன்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ விடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது மக்கள் மற்ற நிறுவன சிம்மில் இருந்து ஜியோ வாக ஜியோ சிம் ஆக மாறிய பின்பும் சலுகையாக ஜியோ இவற்றிற்கு வழங்கவில்லை ஜியோ போன் உடன் வரும் சிம் மட்டுமே சில சலுகைகளை அறிவித்து இருக்கிறது இது கண்டிக்கத்தக்கது ஏற்கனவே பிஎஸ்என்எல் வோடாபோன் ஐடியா ஏர்டெல் ஆகியவற்றிலிருந்து அந்த சிம்மை ஜியோ வாக மாற்றி வைத்திருப்பார்கள் இந்த நிலையில் ஜியோ சிம்மை வாங்கு என்று சொல்வது தவறானது ஏற்கனவே பழக்கப்பட்ட ஜியோ வாக மாற்றப்பட்ட எண்ணுக்கு சலுகைகள் கொடுத்தால் இன்னும் ஜியோ வளரும் ஆகவே புதிதாக வெளிவரும் ஜியோ போன் கள் ஜியோ வாக ஆக்டிவேட் செய்யப்பட்ட எந்த சிம் மாக இருந்தாலும் சலுகைகள் ஒன்றாக கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் செல்போன் வரலாற்றில் ஜியோவின் உடைய பங்கு மகத்தானது ஏர்டெல் பிஎஸ்என்எல் வோடபோன் ஐடியா போன்ற செல்போன் நிறுவனங்கள் அடித்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஜியோ என்பதை மறுப்பதற்கு இல்லை ஆனால் ஜியோ தன்னுடைய சிம் போனுடன் இருப்பதற்கு மட்டும் சலுகைகள் வழங்குவது சரியல்ல அனைத்து ஜியோ உங்களுக்கும் சலுகைகள் ஒரே மாதிரி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்