Reliance Jio பயனர்களுக்கு 1.50 GB இலவச டேட்டா – ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!

0
Reliance Jio பயனர்களுக்கு 1.50 GB இலவச டேட்டா - ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
Reliance Jio பயனர்களுக்கு 1.50 GB இலவச டேட்டா - ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
Reliance Jio பயனர்களுக்கு 1.50 GB இலவச டேட்டா – ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!

ரிலையன்ஸ் ஜியோ தனது அசாம் மாநில வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின் படி, நெட்வொர்க்கிற்குள் வரம்பற்ற இலவச அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வரை டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற சேவைகள் நான்கு நாளைக்கு இலவசம் என தெரிவித்துள்ளது.

இலவச சேவைகள்:

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அதிக சலுகைகளை வழங்கும் அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஜியோ வடகிழக்கு மற்றும் அஸ்ஸாமில் உள்ள பயனர்களுக்கு 4 நாட்களுக்கு 1.5 ஜிபி இலவச டேட்டா உட்பட பல சேவைகளை இலவசமாக வழங்குகிறது

அரசு ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.60,000 – தகுதி, விண்ணப்பிக்கும் முறை?

இது குறித்து ஜியோ அசாமில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில், கடந்த சில நாட்களில் தீவிர வானிலை காரணமாக உங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் IMD மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்கியுள்ளதால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும். சில பகுதிகளில் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாது, மற்ற பகுதிகளில் வாடிக்கையாளர்கள் பயண கட்டுப்பாடுகள் காரணமாக ரீசார்ஜ் செய்ய முடியவில்லை.

Exams Daily Mobile App Download

இந்த துரதிர்ஷ்டவசமான காலங்களில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுடன் உறுதியாக நிற்கிறது. அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு நான்கு நாட்களுக்கு இலவச வரம்பற்ற நன்மைகள் திட்டத்தை வழங்குவதாக நாங்கள் முடிவு செய்து உள்ளோம். இந்த முயற்சியின் கீழ் பயனர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அசாமில் உள்ள டிமா ஹசாவோ, கர்பி அங்லாங் ஈஸ்ட், கர்பி அங்லாங் மேற்கு, ஹோஜாய் மற்றும் கச்சார் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!