தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்வு? ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சார துறை அமைச்சர் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு மத்தியில் தற்போது மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்று திமுக தலைமையிலான அரசு கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மின் வாரியத்தை டிஜிட்டல் மையமாகும் நோக்கில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணத்தை உயர்த்த போவதாக தகவல் வெளியானது.
அதாவது கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க தமிழகத்தின் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் இது குறித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு பல முறை கடிதம் எழுதியது. இதனையடுத்து தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது. மேலும் இந்த மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியமானது ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் கோரியது.
தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!
இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும், ‘சார்ஜிங் பாயிண்ட்’ முன்னதாக 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்