தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த இயலாத நிலையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் வழக்கம் போல் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பள்ளி தேர்வுகள்:

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் தான் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக பள்ளிகள் திக்கப்பட்டுள்ளதால் காலாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கிளை நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் உள்ள மேஜர் லாங்குவேஜ், மைனர் லாங்குவேஜ் என்பது தவறானது ஆகும். நமது தாய்மொழியான தமிழ் மைனர் லாங்குவேஜ் ஆக இருக்கிறது. தேவையில்லாத முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது. ஊர்புற நூலகர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவே பள்ளிகள் திறக்கப்படுகிறது. முழு சம்மதம் உள்ள பெற்றோர்கள் மட்டும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 55% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

3 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – சீன அரசு!

பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகளும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாது. இதனால் டிசம்பர் மாதத்தில் இருந்து மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். வழக்கமான தேர்வு முறைகளில் மாற்றம் இன்றி மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!