தமிழகத்தில் அடுத்த ஒரு ஆண்டிற்கு சீரான குடிநீர் விநியோகம் – முக்கிய தகவல்!
சென்னையில் கடந்த ஆண்டுகளில் குடிநீர் கடும் தட்டுப்பாடு நிலவியது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக குடிநீர் வாரிய இயக்குநர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
குடிநீர் தட்டுப்பாடு:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்தது. ஏனெனில் பருவமழை மாற்றத்தால் மழையின்றி ஏரி, குளங்கள் வறண்டு காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவையான குடிநீருக்காக பல மணி முறை நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்கள் குடிநீரை சரி வர வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 14 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு?
Exams Daily Mobile App Download
இதனையடுத்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் மராமத்து பணிகள் மற்றும் ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் பிரச்சனை சரி செய்யப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் வாரிய இயக்குநர் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் நீர் இருப்பு போதுமானதாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதனால் அடுத்த ஓராண்டில் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் பெய்த எதிர்பாராத கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது அதனால் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனி வரும் காலங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டுள்ளதாகவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்