அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடியாக செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு விதிமுறைகள் வெளியாகியுள்ளது.
முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு :
தமிழகத்தில் கொரோனா 3வது அலை மற்றும் புதிய வகை வைரஸ் ஓமைக்ரான் பரவல் காரணமாக நவம்பர் மாதம் திறக்கப்பட்ட பள்ளி கல்லூரிகள், ஜனவரி 2 வது வாரத்தில் மீண்டும் மூடப்பட்டது. மேலும் அண்மையில் முதல்வர் உத்தரவின் அடிப்படையில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு பிப்ரவரி 1 முதல் 20 ஆம் தேதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலக்கண (Grammar) ஆன்லைன் வகுப்புகள்..!
மேலும் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களை கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கொரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். இந்த அடிப்படையில் மாணவர்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ISCE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் முதல் 2 செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறுமானால், மூன்றாவது செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்து எழுத வேண்டும் மற்றும் விடைத்தாளில் கையெழுத்து மாறியிருந்தால் ஆள்மாறாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.