தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மறுதேர்வுக்கு 23 பேர் விண்ணப்பம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
கடந்த வாரத்தில் வெளியான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில் விருப்பம் இல்லாத மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பம் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 23 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
தேர்வு விண்ணப்பம்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அம்மாணவர்களுக்கான தேர்வு இறுதி முடிவுகள் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாதவர்களுக்கு மறு தேர்வுகளை நடத்த திட்டமிட்ட அரசு அதற்கான விண்ணப்பங்களை செலுத்த வேண்டும் என அறிவித்தது.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த சிறப்பு தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதியானதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மறு தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு நுழைவு சீட்டுகள் இன்று (ஜூலை 31) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகளை எழுத இதுவரை 23 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது தவிர தமிழகத்தில் மீண்டுமாக பள்ளிகளை திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளில், மாணவர்களிடம் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி 100% கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் கண்டறியப்பட்டால், அந்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.