தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? அரசு பரிசீலனை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க அரசு பரிசீலித்து வருவதாகவும், ஓய்வூதிய பணத்திற்கு பதிலாக உத்திரவாத பத்திரம் அளிக்க அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பணியாளர்கள் உதவி அவசியம் என்பதாலும் தமிழகத்தில் தொற்று பரவலால் நிதி நெருக்கடி நிலவுவதால் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அரசு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 42,015 பேருக்கு கொரோனா உறுதி – மத்திய சுகதாரத்துறை தகவல்!
அரசின் இந்த புதிய அறிவிப்பால் இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படுவார்கள். ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று பணி ஆணை வழங்கப்படாமல் இருக்கின்றனர். இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது இளைஞர்களுக்கு பெறும் சுமையாக இருக்கும். எனவே ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது திமுக தலைமையிலான அரசு, தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க பரிசீலித்து வருவதாகவும், ஓய்வூதிய பணத்திற்கு பதிலாக உத்திரவாத பத்திரம் அளிக்க அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபையில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.