12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – கனமழைக்கு எதிரொலி!
கேரளாவில் தற்போது அதிகமாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வரும் ஜூலை 9ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை இன்று மற்றும் நாளை குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் முந்தைய வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் அசானி புயல் காரணமாக மழை பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது எக்கச்சக்கமான மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இந்த திடீர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு நிலை வெகுவாக முடங்கியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்து அதிகமான பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – மத்திய அரசு வெளியீடு!
குறிப்பாக இன்று 9ம் தேதி 11 மாவட்டங்களுக்கு, நாளை 10ம் தேதி 9 மாவட்டங்களுக்கு, நாளை மறுநாள் 11ம் தேதி 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் சுமார் 64.5 மிமீ முதல் 115 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேரள அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.