தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும் பெய்ய கூடும் என ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை:

தமிழகத்தில் சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் (ஆகஸ்ட் 2) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட் 3) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!