தமிழகத்திற்கு “ரெட் அலர்ட்” வாபஸ்.. இருப்பினும் ஆரஞ்சு அலர்ட் தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் நேற்று (நவ. 11) முதல் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நேற்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதனை இந்திய வானிலை ஆய்வு மையம் வாபஸ் வாங்கி இருக்கிறது.
ரெட் அலர்ட் வாபஸ்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவுகிறது. அதனால் உள் தமிழக மாவட்டங்களில் மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்றும் 26 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையால் நேற்று முதல் இன்று வரை, தமிழகத்திற்கு நிர்வாக காரணங்களுக்காக “ரெட் அலர்ட்” அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு விடுத்த ரெட் அலர்ட் அறிவிப்பை வாபஸ் வாங்கி இருக்கிறது. இருந்தாலும் தமிழகத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்” விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், இன்று (நவம்பர் 12) அதிகனமழையும் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.