தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கை – கொரோனா பரவல்!
கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து தற்போது மீண்டும் நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தவும் நோய் தொற்று பரவும் விகிதத்தை கட்டுக்குள் கொண்டுவருவது அரசு உத்தரவிட்டு தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கியுள்ளது.
3ம் அலை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை என மாறி மாறி கோர தாண்டவம் ஆடி வைத்தது. இதன் காரணமாக நாளுக்கு நாள் நோய் தொற்றினால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்றின் தீவிரம் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கிள் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க அவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இரண்டாம் அலை தொடர்ந்து தற்போது நோய் தொற்று மீண்டும் பரவிவருவதால் இது மூன்றாம் அலையாக இருக்கக்கூடும் என பலரும் கூறி வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நோய் தொற்று அதிகம் இருக்கும் மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது கேரளாவில் அதிகப்படியான மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த வார நிலவரப்படி இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் 51.51% கேஸ்கள் தமிழ்நாட்டில் 7, இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு, கர்நாடகாவில் 5, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இருந்து தலா 2, மேகலயா, மிசோரத்தில் தலா 1 மாவட்டங்கள் கவலை அளிக்கக் கூடிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து இந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் உயர்த்தி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களும் இதில் அடங்கும்.