கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

0
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலெர்ட் எச்சரிக்கை - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலெர்ட் எச்சரிக்கை - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

கேரளாவில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பரவலாக பெய்து கொண்டு வருகிறது. அத்துடன் இதில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. அத்துடன் ஆலுவாவில் உள்ள கோவிலை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதுவரை கடந்த 3 நாட்களில் 12 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் கேரளாவில் அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உதவித்தொகை பெற வாய்ப்பு

அதன்படி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்கள் தங்குவதற்காக 95 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முகாமில் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொது மக்களின் பாதுகாப்பிற்காக நடுக்காணி-நிலம்பூர் சாலையில் இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!