அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்பு – ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்பு - ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்பு - ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்பு – ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

கடற்படையில் ஆட்சேர்ப்பு

கடந்த ஜூன் 13ம் தேதியன்று அறிவிக்கப்பட்ட ராணுவத்துக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில் இத்திட்டத்தை செயற்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை பொருட்படுத்தாமல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணையும் நபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. அதாவது, அக்னிபாத் திட்டத்தில் தேர்வாகும் வீரர்களுக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இந்திய கடற்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏதுவாக ஜூன் 25ம் தேதிக்கு பதிலாக நாளை (ஜூன் 22) அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் ஜூலை 1ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Credit & Debit Card பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்!

இதை தொடர்ந்து அக்டோபரில் வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு செய்யப்பட்டவர்கள் நவம்பர் மாதத்தில் கடற்படையில் சேருவார்கள் என்றும் இந்திய கடற்படையின் துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். மேலும், புதிய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அக்னிபாத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் புதிய அக்னிபாத் திட்டத்தின் மூலம் கடற்படையில் பெண் மாலுமிகளை முதன்முறையாக பணியமர்த்த இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!