வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு – தமிழகத்தில் நாளை ‘இந்த’ கல்லூரியில் பணி வாய்ப்புக்கான நேர்காணல்!
தமிழகத்தில் காரைக்கால் மாவட்டத்திலுள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
நேர்காணல்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது, பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வளாகத்தில் அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, சென்னை TCS நிறுவனம் இணைந்து கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்புக்கான முகாம் நடத்தியது.
நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2023
Follow our Instagram for more Latest Updates
இம்முகாமில் காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 346 போ் கலந்துகொண்டனா். தற்போது இதில் தோ்வு செய்யப்பட்ட முதல் 50 பேருக்குரிய இறுதிகட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முகாம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட முதல் 50 பேருக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்காணலில் தகுதியான நபர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்லூரிகளுக்கான வளாக நோ்காணல் தலைமை பொறுப்பாளா் விக்னேஷ் பரமசிவன் தலைமையிலான குழுவினா் தேர்வு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.