Reliance Jio நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகைகள் – யாருக்கெல்லாம் கிடைக்கும்?
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நெட்வொர்க் சரிவர வேலை செய்யவில்லை என பலதரப்பு புகார்கள் எழுந்தன. அது குறித்து பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ சலுகைகள்:
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கி வருவது ஜியோ. சமீபத்தில் பயனர்களுக்கு WhatsApp மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் இயங்காததை தொடர்ந்து ஜியோ பயனர்களுக்கு அதன் நெட்ஒர்க் சரிவர இயங்கவில்லை. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக ஜியோ சரிவர இயங்காததால் பயனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் அக்.12 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செயலிழப்பின் போது பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களுக்கு ஒரு புதிய செய்தியை அனுப்பியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு 2 நாட்கள் வரம்பற்ற திட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பாராட்டு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் இந்த திட்டம் காலாவதியான பின்பு பாராட்டு திட்டம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் தேர்வு? விரைவில் கால அட்டவணை வெளியீடு!
பலருக்கு இது போன்ற அறிவிப்புகள் ஏதும் வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் சில பயனர்கள் காலையிலிருந்து ஜியோ நெட்வொர்க்கில் சிக்கல்களை அனுபவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோ பயனர்கள் பிராட்பேண்ட் இணைப்பு குறைந்து விட்டதாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 4,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் ஜியோ நெட்வொர்க் சிக்கல்களைப் பற்றி 40 சதவிகிதம் சிக்னல் இல்லை என புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நெட்வொர்க் பிரச்சினை மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் பிற நகரங்களில் உள்ள பயனர்களை பாதித்ததாக கூறப்படுகிறது.