Jio வாடிக்கையாளர்களுக்கு ஷாக் – திடீரென ரீசார்ஜ் கட்டணம் 150 ரூபாய் உயர்வு! ரூ.749 திட்டம் இனி ரூ.899!
இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் ப்ரீபெய்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை நிறுவனம் அதிகரித்துள்ளது. தற்போது விலை உயர்த்தப்பட்ட பிரீபெய்டு திட்டத்தை பற்றி பார்ப்போம்.
ப்ரீபெய்டு திட்டம்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு தங்களின் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளர்களை தன்வசம் கவரும் வகையில் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் எந்த தொலைதொடர்பு நிறுவனத்திடமும் இல்லாத அளவு குறைந்த விலையில் தனது சேவையை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் நாளை (ஜூன் 11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
இந்த நிலையில் சமீப காலமாக ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஜியோ இணையதளத்தில் பழைய அறிவிப்பின்படி ரூ.749 திட்டம் என்ற திட்டத்தை தற்போது ரூ.150 உயர்த்தி ரூ.899 திட்டமாக மாற்றியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் கிடைத்த பலன்கள் எவ்வித மாற்றமின்றி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ரூ.899 திட்டத்தில் மொத்தமாக 24GB டேட்டா கிடைக்கிறது. இதனை 12 சுழற்சிகளில் வழங்குகிறது. இதன்படி ஒவ்வொரு 28 நாட்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 50 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் JioTV, Jio Cinema, Jio Security மற்றும் Jiocloud உள்ளிட்ட ஜியோவின் பயன்பாடுகளையும் பெற முடியும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் வரை செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டம் ஜியோ போன் பயனாளர்களுக்கு சிறந்த திட்டமாகும். இத்திட்டம் குறைவாக டேட்டா பயன்படுத்துவோருக்கு உகந்த திட்டமாகும். அத்துடன் பயனாளர்களுக்கு நீண்ட நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய பிரச்சனை இருக்காது.