மீண்டும் சர்ச்சையில் ‘குக் வித் கோமாளி 3’ – சுனிதாவை அழவைத்த ராகுல் தாத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
குக் வித் கோமாளி சீசன் 3ல் வந்துள்ள ஒவ்வொரு குக்குகளும் சமையலில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த வார எபிசோடில் சுனிதா அழுதது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. சுனிதா எதற்காக அழுதார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
கதறி அழுத சுனிதா:
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்களாக கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது சில வாரங்களுக்கு முன்னதாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறையும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கோமாளிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளனர். கிரேஸ் கருணாஸ்,மனோ பாலா, சுருதிகா, அம்மு அபிராமி, அந்தோணி தாசன், வித்யூ லேகா, சந்தோஷ், ரோஷினி, ராகுல் தாத்தா போன்றவர்கள் குக்குகளாக களம் இறங்கியுள்ளனர்.
மீண்டும் சின்னத்திரையில் நடிகை குஷ்பூ – கலர்ஸ் தமிழில் புதிய சீரியல்! ரசிகர்கள் உற்சாகம்!
அதேபோல் இந்த சீசனில் கோமாளிகளாக சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி போன்றவர்கள் புதிதாக கலந்து கொள்கின்றனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரசியம் அதிகரித்துள்ளது என்ற கூறலாம். மேலும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளை தொடர்ந்து தொகுப்பாளர் ரக்சன் மற்றும் நடுவர்கள் செஃப் தாமு மற்றும் பட் அவர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்கின்றனர். இதில், குறிப்பிடத்தக்க வகையில் ராகுல் தாத்தா தனது 81 வயதில் கூட போட்டியாளராக வந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, அப்பாவிற்கு சட்டை வாங்கிய லட்சுமி – இன்றைய எபிசோட்!
ஆனால் ராகுல் தாத்தா தனக்கு சமையல் மிகவும் கொஞ்சமாக தான் தெரியும் என்று அவரே ஒத்துக் கொண்டுள்ளார். இதனால் கடந்த வார இறுதியில் அவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சுனிதா மிகவும் அழுதுள்ளார். அந்த வாரம் ராகுல் தாத்தாவிற்கு சுனிதா தான் ஜோடியாக வந்திருந்தார். ராகுல் தாத்தா திட்டியதால் தான் சுனிதா அழுதாரா அல்லது ராகுல் தாத்தா எலிமினேட் செய்யப்பதால் சுனிதா அழுதாரா என்பது தெரியவில்லை. ஆனால் சுனிதா இவ்வாறு அழுதது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.