தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திடீர் மின்வெட்டு ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து போதிய மின்சாரம் வழங்கப்படாத காரணத்தினால் தான் மின்தடை ஏற்படுகிறது. இதனை சமாளிக்க தமிழக அரசு தனியாரிடமிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
மின்வெட்டு
தமிழகத்தில் கடந்த புதன்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களிலும் பல மணி நேரங்கள் மின்தடை ஏற்பட்டிருந்தது. கடந்த திமுக ஆட்சியிலும் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பழையபடி திமுக வேலையை காட்டுவதாக மக்கள் பலரும் குற்றம் சாட்டினர். இதற்கு பிறகு மின்தடைக்கு என்ன காரணம் என்பதை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். அதாவது மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு போதிய மின்சாரம் வழங்காத காரணத்தினால் மட்டுமே மின்தடை ஏற்பட்டிருந்தது என அறிவித்திருந்தார்.
தினமும் ரூ.7 சேமித்தால் ரூ.60000 ஓய்வூதியம் – முதலீடு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
இந்நிலையில், தற்போது வரை மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய 296 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மின்பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 4.80 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
ExamsDaily Mobile App Download
ஒரு டன்க்கு 137 டாலர் என்கிற விகிதத்தில் ஜி.எஸ்.டி. சேர்த்து 143 டாலர் விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு மட்டுமே 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மேலும், சொந்த மின் உற்பத்தியை 31 விழுக்காடு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை நடந்தது போல மின்தடையால் மக்கள் அவதியுற தேவையில்லை எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.