நடிகை சமந்தா விவாகரத்திற்கு இது தான் காரணம் – முதன் முதலாக மனம் திறந்த தயாரிப்பாளர்!

1
நடிகை சமந்தா விவாகரத்திற்கு இது தான் காரணம் - முதன் முதலாக மனம் திறந்த தயாரிப்பாளர்!
நடிகை சமந்தா விவாகரத்திற்கு இது தான் காரணம் - முதன் முதலாக மனம் திறந்த தயாரிப்பாளர்!
நடிகை சமந்தா விவாகரத்திற்கு இது தான் காரணம் – முதன் முதலாக மனம் திறந்த தயாரிப்பாளர்!

சினிமா உலகில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்த உண்மைத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில், அதற்கான காரணம் குறித்து ‘சாகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

சமந்தா விவாகரத்து

தற்போது தென்னிந்திய திரையுலகில் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை சமந்தாவின் விவாகரத்து தான். சில ஆண்டுகளுக்கு முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகை சமந்தா, சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். அதுவும் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து குறித்து பல கட்டமாக ஆலோசனைகளை மேற்கொண்டு பரஸ்பரம் பிரிவதாக முடிவு செய்தனர்.

விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – வெளியான ப்ரோமோ!

தென்னிந்திய திரைப்பட உலகில் ரசிகர்களால் அதிகம் வர்ணிக்கப்படும் இந்த காதல் ஜோடியின் திடீர் பிரிவு குறித்து பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர். இருப்பினும், நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து பல வகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. குறிப்பாக திருமணத்துக்கு பிறகு நடிகை சமந்தா சில திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்திருந்ததாகவும் அதுவே விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அதே போல குழந்தை பெற்றுக்கொள்வதும் விவாகரத்துக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில் நடிகை சமந்தா இந்த ஆண்டில் குழந்தை பெற திட்டமிட்டிருந்ததாக ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் நீலிமா குணா தெரிவித்துள்ளார். அதாவது ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படத்தில் சமந்தாவை நடிக்க வைப்பதற்காக அவரை அணுகியபோது, தனக்கு கதை பிடித்திருந்ததகாவும் படப்பிடிப்பை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் வெண்பா? ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!

ஏனென்றால் இந்த ஆண்டில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிறகு குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு பின்னர் நடிக்க வருவதாகவும் சமந்தா கூறியதாக தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார். என்னவென்றாலும் உண்மையான விஷயத்தை நடிகை சமந்தா கூறும் வரை வதந்திகள் தொடரும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. சமந்தா ஒருபெண் அவர் தனது திருமண பந்தத்தை முறித்து கொண்டார். இதை பெரிய அளவில் பேசவேண்டிய அவசியம் இல்லை.
    திருமணம் செய்தபின் அவரது நடிப்பு பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவில் இருந்தது. எனவே அப்போதே இந்த பந்தம் நீடிக்காது என்று பலருக்கு ம் தெரியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!