சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து பின்னணி பற்றி நிபுணர்கள் சொல்வது இதுதான்? அதிர்ச்சி தகவல்!
தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்திகள் காட்டுத்தீப் போல பரவி வரும் நிலையில், பிரபலங்களின் விவாகரத்திற்கான பின்னணி குறித்து நிபுணர்கள் சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
நடிகர் விவாகரத்து
பொதுவாக திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்வார்கள். அதனால் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நல்ல நாட்களில் நடத்தப்படும் திருமணங்கள் ஆயிரம் காலத்து பயிர் போல நிலைத்து நிற்கும் என்று நம்பப்படுவது வழக்கம். ஆனால் இப்படி எல்லாவற்றையும் செய்து திருமணங்களை நடத்தினாலும் அனைத்து திருமணங்களும் கடைசி வரை நிலைத்து நிற்பதில்லை. இதற்கு பல விஷயங்கள் காரணமாக அமைந்து விடுகிறது. இப்படி இருக்க இன்றைய நாளில் சமூக வலைதளங்கள் துவங்கி பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு முக்கிய செய்தி நடிகர் தனுஷின் விவாகரத்து தொடர்பான விவாதங்கள் தான்.
‘பாரதி கண்ணம்மா’ அருண், ஆல்யா மனசா இணையும் ரோஜா சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
ஏனென்றால் 18 ஆண்டு கால காதல் திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா என்ற 2 பிரபலங்களின் விவாகரத்து செய்தியானது ரசிகர்கள், திரையுலகினர் உட்பட பலருக்கும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது. தமிழ் திரையுலகை சேர்ந்த சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், சினிமா இயக்குனருமான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷின் இந்த விவாகரத்து முடிவு சமூக வலைதளங்களில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
பெரிய ஸ்டார் பதவி, 18 ஆண்டுகால காதல் வாழ்க்கை, அழகான குடும்பம், தோளுக்கு மேல் வளர்ந்த 2 பிள்ளைகள் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது, இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என ஒரு கேள்விக்கும் பதில் கிடைக்காமல் ரசிகர்கள் மத்தியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து, இயக்குனர் ராம் கோபால்வர்மா திருமணங்களில் இருக்கும் ஆபத்துகளை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்து சொல்வதில் பிரபலங்களின் விவாகரத்துகள் ட்ரெண்ட் ஆக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, விவாகரத்து பெற்றோர்களுக்கு சரியான முடிவாக இருந்தாலும், அது பிள்ளைகளை பாதிக்கும். அதனால் தான் விட்டுக்கொடுத்து செல்வது குடும்பத்திற்கு அவசியம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடிகர் கமல்ஹாசன் துவங்கி ராதிகா, பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், சமந்தா, தனுஷ் உட்பட பல பிரபலங்களின் விவாகரத்துகள் மற்றும் அவர்கள் மேற்கொண்டு வரும் உளவியல் சிக்கல் குறித்தும் குடும்ப அமைப்புகள் சில விவரங்களை கொடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் பேசும் போது, சில நேரங்களில் திருமணம் சிலருக்கு சரியாக அமையாது. அதனால் அவர்கள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். இது சிலருக்கு அவசியமான தாக கருதப்படும். இந்த விவாகரத்தினால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாக சொல்ல முடியாது. அதற்காக திருமண உறவை சகித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. இதில் பிரபலங்களின் விவாகரத்து என்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்நியோன்யம் குறையும் போது அதிகரிக்கிறது.
“செம்பருத்தி” சீரியல் ஷபானா ஆர்யன் லைவில் கேட்ட குழந்தை சத்தம் – குழப்பத்தில் ரசிகர்கள்!
குறிப்பாக நேரத்தை செலவிடுவது விவாகரத்துக்கான முதல் கட்டமாகும். பிரபலங்களின் வாழ்க்கையில் சூட்டிங் உள்ளிட்டவைகளால் நேரத்தை செலவிடுவது குறைவாக இருக்கும். சிலர் இதனை கையாள தெரியாமல் பிரிந்து விடுகின்றனர். இது தவிர பிரபலங்களை பற்றி கிசுகிசுக்கப்படும் செய்திகளும் அவர்களது உறவில் விரிசல் விழ காரணமாக அமைகிறது. குழந்தைகளை பற்றிய விஷயத்தில் கணவனும், மனைவியும் விவாகரத்து செய்து பிரியும் போது அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.
ஆனால் குழந்தைகளிடம் செலவளிக்கும் நேரம் குறையும் போது அப்பா, அம்மா இல்லாதது நல்லது தான் என போகப்போக அந்த குழந்தைகளுக்கு எண்ணம் ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மனநல மருத்துவரும் சமூக ஆர்வலருமான மருத்துவர் பொற்கொடி கூறும் போது, கணவன் மனைவி இருவரும் விவாகரத்து குறித்து பேசும் போது எதிர்காலத்திற்கான திட்டமிடுதல் அவசியம். பிரபலங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் போது குடும்ப சூழ்நிலை குறித்து யோசிக்க வேண்டும். ஒவ்வொரு பிரபலங்களுக்கும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று எதிர்கால திட்டம் இருக்கும். இதை அவர்களின் மனைவி அல்லது கணவர் புரிந்து கொண்டு செயல்படாவிட்டால் விவாகரத்துகள் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.