நடிகை சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு இது தான் காரணம்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம்!

0
நடிகை சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு இது தான் காரணம்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம்!
நடிகை சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு இது தான் காரணம்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம்!
நடிகை சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு இது தான் காரணம்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் திருமணமாகி சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுள்ள நிலையில், இந்த திருமண முறிவுக்கான காரணம் குறித்து நாக சைதன்யா அளித்துள்ள பதில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை விவாகரத்து

தமிழ் சினிமா உலகில் ஒரு துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் படிப்படியாக கதாநாயகியாக உயர்ந்தவர் தான் நடிகை சமந்தா. சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் சில முக்கிய கதாப்பாத்திரங்கள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகை சமந்தா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டார். இது மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்த துவங்கிய சமந்தாவுக்கு மொழிகளை தாண்டி பல்வேறு ரசிகர்கள் உருவானார்கள்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலத்தின் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்!

இதற்கு மத்தியில் தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் ஆக கருதப்படும் நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் வலையில் விழுந்த சமந்தா 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணமும் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் ஜோடிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் சில திரைப்படங்களில் இருவரும் ஜோடியாக நடித்து அசத்தினார்கள். இப்படி மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நாக சைதன்யா, சமந்தா வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடுகள் ஏற்பட துவங்கி இருக்கிறது.

இந்த கருத்து வேறுபாடு நாளடைவில் பிரச்சனையாக மாறி விவாகரத்து வரை இருவரையும் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இந்த பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் இதுவரை நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா தரப்பில் இருந்து உறுதியான விளக்கங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இப்படி இருக்க சமந்தாவுடனான விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த நடிகர் நாக சைதன்யா, நான் நடிக்கும் படங்கள் எல்லாம் என் குடும்ப மரியாதையை கெடுக்கும் விதமாக இருக்க கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துவேன்.

மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு தாயான கண்ணம்மா, மகிழ்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

ஆனால் சமந்தா நடித்துள்ள சில திரைப்படங்கள் அதற்கு முரணாக இருந்தது. இது தொடர்பாக நீண்ட நாட்கள் பேசிய பிறகும், சமந்தா இது போன்ற கதாப்பாத்திரங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். அதனால் தான் இந்த விவகாரத்து நடைபெற்றது என சமீபத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் நடிகை சமந்தா ‘புஷ்பா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு மற்றும் நடனமாகி இருக்கும் நிலையில், இந்த பாடல் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!