தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகளை தொடங்க தயார் – போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தில் பேருந்துகள் இயங்க தயார் நிலையில் உள்ளது. தற்போது முன்கள பணியாளர்களுக்கு மட்டும் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து சேவை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை முதல்வர் பிறப்பித்தார். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் சேவை மட்டும் தொடர்ந்து வழங்கப்பட்டது. பொது போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்களின் நடமாட்டத்தை குறைக்கவும், மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்வதை தவிர்க்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.
பழைய 1 ரூபாய் நாணயங்கள் ரூ.25 லட்சத்திற்கு விற்பனை – முழு விவரம்!!
மேலும் நோய் பரவல் குறையாததால் ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த தொடர் முழு ஊரடங்கு காரணமாக தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது. இதனால் அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவர்கள் இ-பதிவு பெற்று தொழிலை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பேருந்துகள் இயக்குவது பற்றி அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் பேருந்துகள் இயங்க தயார் நிலையில் உள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
சென்னையில் 255 மாநகர பேருந்துகள் முன்களப் பணியாளர்களுக்காக இயக்கப்படுகிறது. 280 மின்சார ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இவை அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக பயன்பாட்டில் உள்ளது. மாநில அரசு அறிவித்தால் மின்சார ரயில் சேவை தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தளர்வுகள் அறிவிப்பில் மெட்ரோ ரயில் சேவை இடம் பெற்றால் இயக்கம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Nice