TNPSC Group 2 தேர்விற்கு தயாரா? அப்போ முதலில் இதை படிங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 நிலை தேர்வுகள் நடப்பு வாரத்தில் மே 21ம் தேதியான சனிக்கிழமை நடக்க உள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இறுதி கட்ட செயல்கள் குறித்து பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது.
Group 2 தேர்வு:
கிட்டத்தட்ட 2 வருடங்களாக அரசுப் பணிக்கான நியமனத்தை முடிவு செய்யும் தேர்வுகள் ஏதும் நடக்கவில்லை. இதனால் அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 5,000 க்கும் மேற்பட்ட குரூப் 2 நிலை அரசு பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மே 21ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே தேர்வர்கள் இறுதி கட்ட பரபரப்பில் இருப்பார்கள். இதனால் முக்கியமான சில விஷயங்களை மறக்க வாய்ப்புள்ளது.
Exams Daily Mobile App Download
அவற்றை தவிர்ப்பதற்காக, இந்த பதிவில் தேர்விற்கு செல்வதற்கு முன்னதாக செய்ய வேண்டிய நினைவூட்டல்கள் மற்றும் முக்கிய அம்சங்களை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நெருங்குவதால் தேர்வர்கள் தேவையற்ற பதட்டத்தை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். இதனால் தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்து ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். ஹால் டிக்கெட், ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற அடையாள அட்டைகள் மற்றும் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மற்றும் முகக்கவசத்தை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும்.
முக்கியமாக தேர்வு நாள் அன்று காலை முன்னதாக தயாராகி தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே பதட்டமில்லாமல் தேர்வு மையத்தை 9 மணிக்கு முன்னதாக அடையும் வகையில் செல்ல வேண்டும். இத்தேர்வில் கேட்கப்படும் 200 வினாக்களில் முதலில், உங்களுக்கு நன்றாக தெரிந்த விடைகளை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, சற்று குழப்பமாக மற்றும் கணித பகுதி வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இறுதியாக உங்களுக்கு பதில் தெரியாத வினாக்களுக்கு விடைகளை நன்கு யோசித்து பார்த்து பதில் அளிக்க வேண்டும். கண்டிப்பாக 200 வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.