தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தினம் – மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஒரு ஆண்டு காலம் முழுவதும் மூடப்பட்டது. இதை அடுத்து பள்ளிகள் அனைத்தும் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. இதை அடுத்து மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்தது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமெடுத்து வந்த காரணத்தால் 2020-21ம் கல்வி ஆண்டிலும் பள்ளிகள் திறப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் வழிக்கல்வி தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 1 ஆம் வகுப்பு வரை மொத்தம் 3,04,403 மாணவ, மாணவியர் உள்ளனர். இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 2,22,403 மாணவ, மாணவிகள், 9 ஆம் வகுப்பில் 29, 838 மாணவ, மாணவிகள், 10 ஆம் வகுப்பில் 27,356 மாணவ, மாணவிகள், மற்றும் 11 ஆம் வகுப்பில் 24,913 மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பள்ளிகள் திறப்பு குறித்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் கடந்த ஆண்டில் பயின்ற மாணவர்களின் விவரம் வகுப்பு வாரியாக தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை எதிரொலியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.