‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஷினி – இன்ஸ்டா பயோவால் ரசிகர்கள் குழப்பம்!
சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய பிற்பாடு கூட நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் கண்ணம்மா என்று குறிப்பிட்டுள்ளதால், அவர் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நடிகை ரோஷினி
விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ஏராளமான மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். டிவி சீரியல்களில் இல்லாத வகையாக புது விதமான முயற்சியில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கனமான கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்து வந்தவர் தான் நடிகை ரோஷினி. இவருக்கும் நடிப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்த சீரியலில் நடிக்க துவங்கிய இவருக்கு ஆரம்பத்தில் ஏராளமான விமர்சனங்கள் கிடைத்து வந்தது.
என்றாலும் கண்ணம்மா கதாப்பாத்திரத்திற்கு தேவையான அப்பாவித்தனம் மற்றும் தைரியமான பெண்ணாக நடிப்பில் வித்தியாசத்தை காட்டி வந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படி எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த சமயத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திடீரென விலகினார். அதாவது இத்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வந்த ரோஷினிக்கு திரைப்பட வாய்ப்புகள் அமைந்ததை தொடர்ந்து சீரியலை விட்டு விலக முடிவு செய்தார்.
அந்த வகையில் இவருக்காகவே ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் சீரியல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பதற்காக புதுமுக நடிகையான வினுஷா என்பவர் புதிய கண்ணம்மாவாக களமிறக்கப்பட்டார். இவரும் நடிகை ரோஷினியை போல நிறம் மற்றும் முக ஜாடையை பெற்றிருப்பதால், கண்ணம்மா கேரக்டரில் ஓரளவுக்கு செட் ஆகி விட்டார். தவிர இவரது நடிப்பும் கூட மக்களை திருப்திபடுத்தி இருக்கிறது.
விஜே சித்ரா நடிப்பில் வெளிவர இருந்த “அன்பே அன்பே” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!
இருந்தாலும் பழைய கண்ணம்மாவான நடிகை ரோஷினி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு திரும்பி வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஒரே விருப்பமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவில் ‘கண்ணம்மா, பாரதி கண்ணம்மா’ என்று ஹாஸ்டேக்குகளை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் சீரியலில் இருந்து விலகிய நடிகை ரோஷினி மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’, கண்ணம்மாவாக வருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.