மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிகரிக்கும் கொரோனா! மக்கள் அவதி!
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா குறைந்ததை அடுத்து 2 நாட்கள் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 நாட்களில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கு:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல உலக நாடுகளும் நிலை குலைந்து போனது. 2 ஆண்டுகளில் நான்கு அலை தாக்கத்தில் இருந்து பல நாடுகள் தற்போது தான் படிப்படியாக மீண்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரோனாவின் ஐந்தாம் அலை தாக்கம் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து சீனாவில் ஷாங்காய் நகரில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 2 மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். மேலும் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
5 மாநிலங்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல் – கொரோனா பரவல் எதிரொலி!
இந்நிலையில் Jing’an மற்றும் pudong பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜுரோ கோவிட் கொள்கையின் நடவடிக்கையாக வரும் நாட்களில் மெகா கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டது.