TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம்? அனுமதி அளிக்குமா அரசு!
தமிழகத்தில் அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் ஒரு வாரம் அதனை நீடிக்குமாறு பட்டதாரிகள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு உள்ளது.
TNTET:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விட கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டது. இந்த நிலையில் சென்ற வருடம் பொது தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 13% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். இது பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் சமீபத்தில் தான் முடிவு பெற்றது. அதற்கான கடைசி நாள் அன்று விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கிய காரணத்தால் பல பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாமல் போனது. அதனால் அவர்களின் சார்பில் தற்போது ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு வேண்டுகோள் வைத்து உள்ளனர். இந்த வேண்டுகோளுக்கு தமிழக அரசு தலை சாய்க்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.