தமிழக பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள் தொடங்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பள்ளிகளில் ஷிப்ட் வகுப்புகள்:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் நேரடி வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில வாரமாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. அதனால் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000? பதிவு செய்யும் வழிமுறைகள் இதோ!
தினமும் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் பெற்றோர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பள்ளிகள் வாரந்தோறும் நடைபெறாமல் வாரத்திற்கு 2 நாள் என சுழற்சி முறையில் நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, தொற்று அபாயம் குறையும் வரை ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படலாம் எனவும், ஒரு சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு உடனடியாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள் நடத்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் எனவும் அரசின் வழிமுறைகளை பின்பற்றி செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.