RCFL நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க பிப்.5 கடைசி நாள்..!
ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிவிப்பில் Officer, Manager & Senior Manager போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான லிங்க் பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
RCFL வேலைவாய்ப்பு அறிவிப்பு :
- சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், Officer, Manager & Senior Manager பதவிக்கு என மொத்தமாக 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.
-
- Manager பதவிக்கு – 05
- Senior Manager பதவிக்கு – 02
- Officer பதவிக்கு – 11
-
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s degree / Master’s Degree / MBBS / CA / CMA போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும்.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து பணிக்கு தொடர்புடைய பிரிவில் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- Manager பதவிக்கு 42 வயது, Senior Manager பதவிக்கு 49 வயது, Officer பதவிக்கு 34 வயது என பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்ட வயது தளர்வுகள் குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர் தேர்வாகும் பணியின் தன்மை மற்றும் பதவியின் அடிப்படையில் மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை வழங்கப்படும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview க்கு அழைக்கப்பட்டு, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
RCFL விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இப்பணிக்கு இறுதி நாளாக 05.02.2022 அன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளவும். தற்போது இப்பணிக்கான இறுதி வாய்ப்பு நாளையுடன் நிறைவடைவதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்கள் பதிவுகளை செய்து கொள்ளவும்.