தமிழகத்தில் புதிய மின் இணைப்புடன் RCD சாதனம் – புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து வகையான மின்சார இணைப்புகளுடன் RCD என்ற உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
மின் இணைப்பு:
மின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், ஒரு உயிர்காக்கும் கருவியை அனைத்து மின் இணைப்பிலும் பொருத்த அரசு முயற்சி எடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் மின் பகிர்மான விதித்தொகுப்புகளில் புதிய விதிமுறைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் உபயோகப்படுத்தப்படும் ஒருமுனை, மும்முனை மற்றும் தற்காலிக மின் இணைப்புகளில் ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (RCD) என்ற உயிர் காக்கும் சாதனம் பொருத்தப்பட உள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் திருக்குறள் உரை – அமைச்சர் உறுதி!
அதாவது மின்சார பரிமாற்றத்தின் போது ஏற்படும் மின் அதிர்ச்சியை தவிர்க்கும் வகையிலும், அதே நேரத்தில் மின் கம்பிகளில் ஏற்படும் கசிவை உணரக்கூடிய வகையிலும் 30 மில்லி ஆம்பியருக்கு உட்பட்ட சாதனத்தை பொறுத்த வேண்டும். அதே போல 10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தியிருக்கும் அங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக்கூடங்கள், கிடங்குகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் ஏற்படும் மின்கசிவு தீ விபத்தை தடுக்கும் வகையில், குறிப்பிடப்பட்ட வளாகங்களில் மின் இணைப்புகள் மொத்தமாக இருக்கும் பட்சத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவு கொண்ட RCD சாதனத்தை பொருத்த வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த சாதனத்தை மின் பளுவின் அளவு, கட்டிடத்தின் தளம் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு ஒவ்வொரு மின்சுற்றிலும் RCD சாதனத்தை பொருத்த வேண்டும். புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், இந்த உயிர் காக்கும் கருவியை நிறுவ உறுதியளிக்க வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்புகளுக்கு அனுமதி அளிக்க கூடாது. அதாவது இந்த புதிய கருவிகள் அனைத்தும் மின் விபத்துகளை தவிர்த்து மக்கள் உயிரை காப்பாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை முறையாக அமல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.