நாட்டில் முதல் முறையாக இந்த 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் – டிச.1ம் தேதி முதல்!!
நாட்டில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் உதவியுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாக உள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
டிஜிட்டல் கரன்சி
இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரிசர்வ் வங்கியின் உதவியுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தற்போது டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வருவது குறித்த அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த அறிக்கையில் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாள் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த டிஜிட்டல் கரன்சிகள் மும்பை, டெல்லி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பின்பு அகமதாபாத்,லக்னோ, சிம்லா, பாட்னா, இந்தூர், கவுகாத்தி ஆகிய நகரங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ios பயனர்களுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு – லேட்டஸ்ட் அப்டேட்!
Exams Daily Mobile App Download
மேலும் டிஜிட்டல் முறையில் c₹-R என்ற குறியீடு பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சி யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ ஆகிய 4 வங்கிகளில் அறிமுகமாக உள்ளது. மேலும் டிஜிட்டல் கரன்சி சோதனை முறையின் போது 8 வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.