RBI ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – கடன்களுக்கான EMI அதிகரிப்பால் சாமானியர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனையடுத்து தற்போது வங்கிகள் தங்களது வருவாயினை அதிகரிக்கும் பொருட்டு வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வட்டி விகிதம்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட தொழில் சரிவினால் நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பண வீக்கத்திற்கு மத்தியில், மத்திய ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதனால், கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் திருத்தப்படும் போது, கடனாளியின் EMI தொகை அதிகரிக்கிறது.
தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய நடவடிக்கை!
அதன்படி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஜூன் 15 முதல் அமலுக்கு வரவுள்ளது. இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதுவரையில் 6.85% செலுத்தி வந்தவர்கள், இனி 7.05% செலுத்த வேண்டியிருக்கும். ஆறு மாத கால அவகாசத்திற்கு, 7.15%ல் இருந்து, 7.35% ஆக உயர்ந்துள்ளது. இதே 1 வருட காலத்திற்கு வட்டி விகிதம் 7.20%ல் இருந்து 7.40% ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 வருட கால அவகாசத்திற்கு 7.40%ல் இருந்து, 7.60% ஆக அதிகரித்துள்ளது. இதே மூன்று வருட காலகட்டத்திற்கு 7.50%ல் இருந்து 7.70% ஆக அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் முன்னதாக கட்ன்களுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக் கடன் என் எம் சி எல் ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான EMI தவணை தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.