எச்டிஎப்சி வங்கி மீதான தொழில்நுட்பத் தடை நீக்கம் – RBI அறிவிப்பு!
கடந்த ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கி புதிய கடன் அட்டைகளை எச்டிஎப்சி வங்கி வழங்க தடை விதித்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத் தடை:
கடந்த 2020 டிசம்பரில் ரிசர்வ் வங்கி எச்டிஎப்சி வங்கி தனது தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்கும் வரை அனைத்து புதிய டிஜிட்டல் வெளியீடுகளையும் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தியது. முன்னதாக எச்டிஎப்சி வங்கியின் கிளைகளில் பல முறை டிஜிட்டல் முறை செயல்பாடுகள் முறையாக செயல்படாமல் இருந்ததே இந்த தடை விதிப்புக்கு காரணம். இதனால், புதிய டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும், புதிய கடன் அட்டைகளை வழங்குவதற்கும் தடை விதித்தது.
உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஆப்கன் நிகழ்ச்சி தொகுப்பாளினி – தலிபான் அதிகாரியுடன் நேர்காணல்!
தற்போது, எச்டிஎப்சி வங்கி மீதான இந்த தொழில்நுட்ப தடை நீக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வங்கி நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், புதிய கடன் அட்டைகளை வழங்குவதற்கு அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. எச்டிஎப்சி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சசிதர் ஜக்திஷன் கடந்த மாதம் ஒரு அறிவிப்பில், ஜூலை 17 அன்று ஆர்.பி.ஐ. தடை நீக்கப்பட்டவுடன் எச்டிஎப்சி மீண்டும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் தொழில்நுட்ப மாற்றத்தை முடிக்க சுமார் 12 முதல் 15 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
தலைமை தகவல் அதிகாரி ரமேஷ் லட்சுமிநாராயணன் அவர்கள், டிசம்பர் 2020 முதல் ஹெச்டிஎப்சி சிறந்த கண்காணிப்பு அமைப்புகளையும், அவசர கால மாற்றங்களை எளிமையாக கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். வங்கியின் மீது தொழில்நுட்ப தடை விதிக்கப்படுவதற்கு முன்னரும், பின்னரும் உள்ள வேறுபாடுகளை அவர் சுட்டி காட்டினார். தடி விதிக்கப்பட்ட பிறகு, அதற்காக வங்கி நிர்வாகம் மிகவும் தீவிரமாக செயல்பட்டு நிலைமையை சரி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.