டிகிரி முடித்தவரா? – ரிசர்வ் வங்கியில் (RBI) வேலைவாய்ப்பு 2022..!
இந்திய ரிசர்வ் வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. இங்கு Legal Officer, Manager, Assistant Librarian, Architect மற்றும் Curator பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விவரங்கள் பற்றிய தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
RBI வேலைவாய்ப்பு விவரங்கள் :
- ரிசர்வ் வங்கி அறிவிப்பில், Legal Officer, Manager, Assistant Librarian, Architect மற்றும் Curator பதவிக்கு என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor’s degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Master’s Degree மற்றும் Diploma படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணியின் தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Examination / Offline Examination மற்றும் Interview போன்ற தேர்வு முறைகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
- GEN / OBC / EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- மற்றும் SC / ST / PwBD வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
RBI விண்ணப்பிக்கும் முறை :
இந்த அரசு வங்கிப் பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 04.02.2022 நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது இப்பணிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைவதால் உடனே இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.