கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? முழு விபரம் இதோ!
இந்தியாவில் கிழிந்து போன, சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
முழு விவரம்
இந்தியாவில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை கடைகளிலும், பேருந்துகளிலும், சந்தைகளிலும் கொடுத்து பொருட்கள் வாங்குவது பெரிய பிரச்சனையாக உள்ளது. ரூபாய் நோட்டுகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3000 வரை பென்ஷன் – சூப்பர் திட்டம்!
பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுக்களுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுக்கள் கொடுக்க வேண்டும், சில்லரை நாணயங்களை இல்லை என்று சொல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கரன்சி தாளின் 50%க்கும் மேற்பட்ட பகுதி கிழியாமல் அல்லது சேதம் அடையாமல் இருந்தால் முழுமையான ரூபாய் மதிப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் நவ.15 முதல் 1 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – DEO செயல்முறைகள்!
50%க்கும் மேல் சேதம் அடைந்திருந்தால் உங்களுக்கு கிழிந்த பணத்திற்கு நிகரான மதிப்பு கிடைக்காது.இது ரூ. 20 வரையிலான ரூபாய்களுக்கு மட்டுமே பொருந்தும். 40%க்கும் மேல் 80%க்குள் சேதமற்ற பகுதி இருந்தால் பாதி மதிப்பு மட்டுமே கிடைக்கும். கிழிந்த ரூபாய்களுக்கான சரியான மதிப்பு கிடைக்காத போதிலும் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பணம் ஆர்.பி.ஐக்கு அனுப்பப்பட்டு அவை அங்கு அழிக்கப்படும். கிழிந்து போன அல்லது சேதம் அடைந்த பணத்தினை நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து மாற்றி கொள்ளலாம்.