வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – RBI எச்சரிக்கை!
வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை புதுப்பிப்பதாக கூறி மோசடிகள் அதிகம் நடைபெறுவதாக புகார் எழுந்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி:
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நூதன திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. தற்போது வங்கி விவரம் அனைத்தும் இணைய வழி ஆனதால் அந்த விவரங்களை திருடும் வகையில், இணைய திருடர்கள் புதிய வகையில் மோசடி செய்து வருகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி விவரம் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – இந்த ரேஷன் கார்டுகளுக்கு மறுப்பு?
மோசடி கும்பல் கேஒய்சி விவரங்களை புதுப்பிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களை பெற்று பண மோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கியில் புகார்கள் குவிந்தன. எனவே வங்கி கணக்கு எண், இணையதள வங்கி சேவை விவரங்கள், கார்டு குறித்த தகவல்கள், போன் நம்பர், ஓடிபி உள்ளிட்ட எந்த தகவல்களையும், வாடிக்கையாளர்கள் போன், எஸ்எம்எஸ், இமெயில் முதலியனவற்றை அடையாளம் தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் செப்.19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
மேலும் வங்கி கணக்கு முடக்கப்படும் எனக்கூறி இது போன்ற தகவல்களை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று பணத்தை திருடுவது அதிகமாகி வருகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும், கேஒய்சி புதுப்பிப்பதற்காக வரும் இணைப்புகளை வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய கூடாது எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தி உள்ளது.