அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வு! RBI அறிவிப்பு!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வு! RBI அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வு! RBI அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வு! RBI அறிவிப்பு!

தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் கடந்த 36 நாட்களில் 2 முறை என்ற அளவில் குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

வட்டி விகிதம் உயர்வு

சமீப காலமாக வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களில் தொடர்ச்சியான உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது, உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் கடந்த 36 நாட்களில் 2 முறை, வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் மீண்டுமாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நடை திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ், ‘இந்தியாவில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 0.5 சதவீத உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனுடன் ரெப்போ வட்டி விகித உயர்வும் அமலுக்கு வர இருக்கிறது.

Exams Daily Mobile App Download

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் ஏற்பட்ட பணவீக்கம் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்தால் மட்டுமே பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதற்கிடையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு இருக்கும் என்பதால் அதிகளவு விளைச்சலுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2% ஆக இருக்கும். இந்த வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!