ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னர் – ரபி சங்கர் நியமனம்!!
ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக ரவி சங்கர் என்பவர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த பதவியில் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை கவர்னர்:
ரிசர்வ் வங்கியில் இதுவரை துணை கவர்னராக பதவி வகித்து வந்த பி.பி.கனுங்கோ என்பவர் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றுள்ளார். அதனால் இந்த பதவியில் ரபி சங்கர் என்பவரை நியமித்து ரிசர்வ் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. ரபி சங்கருக்கு முன்னதாக அந்த பதவியில் இருக்கும் ஜெயின், பத்ரா, ரஜேஷ்வர் ராவ் ஆகியோரை தொடர்ந்து 4வது துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 15 வரை பல்கலை மாணவர்களுக்கு கோடை விடுமுறை – பல்கலை நிர்வாகம் அறிவிப்பு!!!
பொருளாதாரத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்த ரபி சங்கர் ரிசர்வ் வங்கியில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரையும் மத்திய நிதியமைச்சகத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.
தவிர 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான, இந்தியன் பைனான்சியல் டெக்னாலஜி அண்ட் அலைய்டு சர்வீசஸ் (IFTAS) பிரிவின் தலைவராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக தற்போது பொறுப்பேற்றுக்கொண்ட ரபி சங்கர் இன்னும் 3 வருடங்களுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்