Mastercard நிறுவன Debit, Credit கார்டுகள் வழங்க இன்று முதல் தடை – RBI அறிவிப்பு!
மாஸ்டர் கார்டு நிறுவனம் தகவல்களை கட்டணம் கொடுத்து சேமிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள கொள்கைக்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகம் புதிய மாஸ்டர் கார்டுகளை வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தடை:
கடந்த 2018ம் ஆண்டு ரிசர்வ் வங்கி, இந்திய வாடிக்கையாளர்கள் தகவல்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் சர்வர்கள் டெபிட் – கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்கள் அனைத்து நிறுவனங்களிலும் இருக்க வேண்டும் என்று விதிகளை பிறப்பித்தது. இந்த உத்தரவை மாஸ்டர் கார்டு நிறுவனம் போதுமான கால அவகாசம் வழங்கியும் முறையாக பின்பற்றவில்லை. வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் பணபரிமாற்ற விவரங்கள் இந்தியாவில் மட்டுமே சேகரித்து வைக்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டது.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3,443 பணியிடங்கள் – உயர்கல்வித்துறை உத்தரவு!
இந்த விதிமுறைகளை மாஸ்டர் கார்டு நிறுவனம் பின்பற்றாத காரணத்தால் இந்தியாவில், புதிய மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இந்த தடை உத்தரவு ஜூலை 22ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டுகள் இனி வங்கி நிர்வாகத்தால் விநியோகம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் முன்னதாகவே மாஸ்டர் கார்டு பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மாஸ்டர் கார்டின் தடையால் இனி இந்தியாவில் விசா கார்டுகளின் வளர்ச்சி அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நடப்பு ஆண்டில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டின்னர்ஸ் கிளப் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் புதிய கார்டுகளை மே 1-ம் தேதி முதல் விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.