இனி 2000 நோட்டுகள் புழக்கத்திற்கு வராது.. காரணம் இது தான்..RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் கூட 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை. இது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள்:
இந்தியாவில் கடந்த 2017 ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. செல்வந்தர்கள் முதல் சாமானியர்கள் வரை செய்வதறியாமல் தவித்தனர்.மேலும் புதிய ரூ.500,200,2000 நோட்டுகளையும் வெளியிட்டார்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் வைத்தவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றனர். அதன் பிறகு புதிய ரூபாய் நோட்டுகள் பயன்பாடு இயல்பாக நடைபெற்று வந்தது. ஆனாலும் இதில் சிறிய சிக்கல் என்னவென்றால் பொது மக்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர். எளிதாக சில்லறை கிடைப்பதில்லை என்று கூறினர்.
மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை திட்டம் – மாதம் ரூ. 3000.. – தெலுங்கானா அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதனால் 2000 ரூபாய் நோட்டை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 2000 ரூபாய் நோட்டுகளே அச்சிடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2017, 2018ம் ஆண்டில் 46.690 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும், 2018-19 ஆம் ஆண்டில் 46.690 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆண்டுதோறும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் எண்ணிக்கை குறைந்து தற்போது அச்சிடுவதே இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.