சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய ரவீந்திர ஜடேஜா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த CEO!
நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக சமீபத்தில் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. இது குறித்து தற்போது அணியின் CEO காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல்:
இந்தியன் பிரீமியர் லீக் 2022 இன் தொடக்கத்தில் சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரவீந்திர ஜடேஜா.
ஆனால் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்த சீசனின் நடுப்பகுதியில் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். இதற்கிடையில் விலா எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் 2022 இல் இருந்து ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டதாக புதன்கிழமை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது. மேலும் CSK இன் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜாவைப் Follow செய்யவில்லை. அதே நேரத்தில் ஜடேஜா மற்றும் CSK அணி உரிமையாளருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சில தகவல்கள் பரவியது.
Exams Daily Mobile App Download
தற்போது CSK அணியின் CEO விஸ்வநாதன் இந்த அறிக்கைகளை மறுத்து, ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதள பக்கங்கள் எதையும் நான் பின்பற்றுவதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. மேலும் நிர்வாகத் தரப்பில் இருந்து, எந்த பிரச்சனையும் இல்லை. ஜடேஜா எப்போதும் CSK இன் எதிர்காலத்திற்கான திட்டத்தில் உறுதியாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது, அதன் பிறகு டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதனை தொடர்ந்து மருத்துவ ஆலோசனையின் பேரில், அவர் இந்த ஐபிஎல்லில் மேற்கொண்டு பங்கேற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டு அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 10 போட்டிகளில் 116 ரன்கள் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.