Tokyo Olympics 2020 Wrestling – ரவி தகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்று முடிந்துள்ள ஃப்ரீஸ்டைல் 57 மற்றும் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்ததான மல்யுத்த வீரர்கள் ரவி தஹியா மற்றும் தீபக் புனியா இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மல்யுத்த போட்டி
ஜப்பானில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டியில், 13 ஆவது நாளான இன்று (ஆகஸ்ட் 4) ஒலிம்பிக் பதக்கத்துக்கான வெற்றி வாய்ப்புகளை இந்திய வீரர்கள் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை துவங்கிய ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதன் மூலம் இந்தியாவுக்கான தங்கப்பதக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனிடையே இன்று காலை 8 மணியளவில் துவங்கிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்களான ரவி தஹியா மற்றும் தீபக் புனியா இருவரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தியாவில் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 562 பேர் உயிரிழப்பு!
அதாவது மல்யுத்தத்திற்கான கால் இறுதிப் போட்டியில் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் ரவி தஹியா 14 – 4 என்ற செட் கணக்கில் பல்கேரியா நாட்டை சேர்ந்த ஜார்ஜி வங்கேலோவை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அதே சமயம் இந்திய வீரர் தீபக் புனியா, ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 86 கிலோ மல்யுத்த பிரிவில் சீனாவை சேர்ந்த ஜுஷென் லினுடன் களம் கண்ட நிலையில் 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்வதற்கான இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. இதனிடையே இன்று (ஆகஸ்ட் 4) காலை 8 மணியளவில் நடைபெற்று முடிந்துள்ள பெண்களுக்கான மற்றுமொரு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக், ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த இரினா குராச்ச்கினா என்பவரிடம் 8-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளார். இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை அவர் நழுவ விட்டுள்ளார்.