இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!
இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொண்டு வரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட 3 பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது ஆட்டத்தில் இந்திய அணியும், 3 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
திருசெந்தூர் கோவிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி – முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை!
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்ட இவருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ரவி சாஸ்திரி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் எருக்கலம் பூ, வேப்பங்குச்சிகள் விற்பனை அமோகம் – விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
இவரை தொடர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்ட்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இம்மூவரும் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அணியின் பிஸியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் என்பவருக்கு கொரோனா தொற்று முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டி தொடரில் ரவி சாஸ்திரி, பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.